Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபோராடிய வாஷிங்டன் சுந்தர்; தோல்வியைத் தழுவிய இந்தியா

    போராடிய வாஷிங்டன் சுந்தர்; தோல்வியைத் தழுவிய இந்தியா

    நேற்று நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. 

    இதைத்தொடர்ந்து, நேற்று இருபது ஓவர் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. 

    டேவன் கான்வே மற்றும் மிச்சல் முறையே 52, 59 ரன்களை விளாசினர். மேலும், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 35 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. 

    இந்திய அணித் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆட ஆரம்பித்தது. 

    தொடக்கத்திலேயே, இந்திய அணி வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. சூர்யகுமார் யாதவும்-கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் இணைந்து ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர்.

    சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுக்கும்,  ஹார்திக் பாண்டியா 21 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், வாஷிங்கட் சுந்தர் களமிறங்கினார். இவர் அதிரடியாக ஆடி 28 பந்துகளுக்கு 50 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால், மற்ற வீரர்கள் சொதப்ப இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

    நியூசிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 

    குஜராத் மோர்பி பால விபத்து; 1200 பக்கத்தில் குற்றப்பத்திரிகை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....