Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்டிக்டாக் புகழ் 'டான்சர் ரமேஷ்' காலமானார்- பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

    டிக்டாக் புகழ் ‘டான்சர் ரமேஷ்’ காலமானார்- பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

    டிக்டாக் மூலம் பிரபலமான ‘டான்சர்’ ரமேஷ் சென்னையில் 10-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். 

    சென்னை பெரியமேடு அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.இவருக்கு வயது 42. கூலி வேலை செய்து வந்தவர், டிக் டாக் செயலி புழக்கத்தில் இருந்தபோது, நடனம் செய்து வீடியோவை வெளியிட்டதன் மூலம் ரமேஷ் பிரபலமானார். 

    இதைத்தொடர்ந்து, ரமேஷுக்கு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த வாய்ப்பையும் பயன்படுத்தி தனது திறனை வெளிக்காட்டி அவர் ஆடிய நடனம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், அண்மையில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் ரமேஷ் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

    இந்நிலையில், நேற்று புளியந்தோப்பு, கே.பி. பார்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் 10-ஆவது மாடியிலிருந்து ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பேசின்பாலம் காவல்துறை, அங்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்று ரமேஷின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    போராடிய வாஷிங்டன் சுந்தர்; தோல்வியைத் தழுவிய இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....