2023-ம் ஆண்டுக்கான ‘மோட்டாஜிபி பைக்’ பந்தயம் இந்தியாவில் நடைபெற உள்ளது.
‘மோட்டாஜிபி பைக்’ பந்தயம் எனப்படும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ மோட்டார் சைக்கிள் ரேசிங் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. இந்த வகை பைக் ரேசிங்கை கண்டுகளிக்க பெரும் ரசிக பட்டாளமே உள்ளது.
இப்படியான ‘மோட்டாஜிபி பைக்’ பந்தயத்தை இந்தியாவில் நடத்த இந்திய அரசு தரப்பில் பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ‘கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் பாரத்’ என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மேலும், இந்த வருடத்திற்கான (2022-ம் ஆண்டு) ‘மோட்டாஜிபி பைக்’ உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயங்கள் நொய்டா நகரில் உள்ள புத்தா சர்வதேச சர்க்கியூட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த பைக் ரேஸ் பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: தரவரிசையில் முன்னேறிய மந்தனா…உற்சாகத்தில் ரசிகர்கள்!