ஆசிய கோப்பை இருபது ஓவர் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 வரையில் மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியும் பங்கேற்கிறது.
இந்நிலையில், ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களம் கண்ட அதே இந்திய அணி மாற்றமின்றி இந்தப் போட்டிக்காக தக்கவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்:
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்னேஹ ராணா, தயாளன் ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்குர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஷ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், கே.பி.நவ்கிரே, தானியா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்.
இதையும் படிங்க: பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டி.ராஜா – இவர் யார் தெரியுமா ?