இந்தியா-இலங்கை இரு நாடுகள் இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா-இலங்கை இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதற்காக இரு நாடுகளும் பரிசீலனை செய்து வருகின்றன.
இது தொடர்பாக இலங்கை தலைநகர் கொழும்புவில் இருக்கும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா, இலங்கை இடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாரத் ஸ்டேட் வங்கி, இந்திய வங்கி, சிலோன் வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் ஏற்பாட்டில், வங்கிக் கணக்குகளின் மூலமாக இந்திய ரூபாயில் வர்த்தகப் பணப் பரிவர்த்தனைகளைத் தொடங்கி இருப்பதன் அனுபவங்களை பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டனர். இதனால் வரும் பலன்களையும் பிரதிநிதிகள் விவரித்தனர். இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி குழுவும் இணையவழியில் பங்கேற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபிள்யுபில் – விஸ்வரூபம் எடுத்த கௌர்; சுருண்ட குஜராத் அணி..