புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய தொற்று பாதிப்பு 1,968 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்து 2,468 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 05) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும் .
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ,46 ,1 ,934 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.இதில் கேரளத்தில் மட்டும் 09 பேர் இறந்துள்ளனர் .இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,733ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,280 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,39,883 ஆக அதிகரித்துள்ளது .
இதனால், நாடு முழுவதும் இதுவரை 2,18,83,40,816 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.நேற்று ஒரு நாளில் மட்டும் 2,90,216 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.