Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் தொடர் சூறையாடல் - கண்டனம் தெரிவித்த தூதரகம்

    ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் தொடர் சூறையாடல் – கண்டனம் தெரிவித்த தூதரகம்

    இந்திய-ஆஸ்திரேலிய சமுதாயத்தினர் இடையே வெறுப்பை ஏற்படுத்ததான், ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் சூறையாடப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப்பை பிரித்து இரு பகுதியையும் இணைத்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டுமென்று நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட ஒன்றாகும். 

    இருப்பினும், ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகளில் காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த சில வாரமாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில்களை சேதப்படுத்தி வருகின்றனர். 

    கடந்த 16-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சிவா- விஷ்ணு கோயிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். இதற்கு முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சுவாமி நாரயண் கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடினர். 

    இச்சம்பவம் தொடர்பாக தற்போது விக்டோரியா மாகாண போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 3-ஆவதாக ஒரு இந்து கோயில் கடந்த ஜனவரி-23ஆம் தேதி தாக்குதலுக்குள்ளானது. 

    இந்நிலையில், இந்த தொடர் சம்பவங்கள் குறித்து இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து இந்திய தூதரகம் கூறியுள்ளதாவது; 

    இச்சம்பவங்கள் இந்திய-ஆஸ்திரேலிய சமுதாயத்தினர் இடையே வெறுப்பையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் முயற்சிகள் என தெளிவாக தெரிகின்றன. காலிஸ்தான் ஆதரவாளர்கள், ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுக்கு நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எப்ஜே) போன்ற அமைப்புகள் ஆஸ்திரேலியாவுக்கு வெளியிலிருந்து உதவுகின்றன. இது குறித்த இந்தியாவின் கவலையை ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்துள்ளோம். இந்த முயற்சிகளை தடுக்க ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுக்கும். 

    இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பாம்பு பிடி தொழிலாளர்களுக்கு பத்ம ஶ்ரீ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....