இரண்டாயிரம் ரூபாய் தாள் வடிவில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணம் என்றதும் அதற்கான அழைப்பிதழை தயார் செய்து உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து அவர்களை திருமணத்திற்கு அழைப்பது வழக்கம். இதில், திருமண அழைப்பிதழ்களை வித்தியாசமான முறையில் செய்பவர்களும் உண்டு.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரின் இளைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், வெங்கடேஷ் மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக தயார் செய்து உறவினர்களுக்கு வழங்க வேண்டும் என நினைத்து உள்ளார்.
அதன்படி வெங்கடேஷ், 2000 ரூபாய் தாள் வடிவில் அழைப்பிதழை தயார் செய்துள்ளார். மணமகள்-மணமகன் பெயர்களை முன்புறத்தில் இடம்பெற, பின்புறத்தில் திருமண விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த 2000 ரூபாய் திருமண அழைப்பிதழை வாங்கிய உறவினர்கள் உண்மையான 2000 ஆயிரம் ரூபாய் தாளை வாங்கியதாக உணர்ந்துள்ளனர். முன்னதாக, வெங்கடேஷ் தனது மூத்த மகள் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும்’ – மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை வைத்து அண்ணாமலை சூசகம்!