Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும்' - மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து அண்ணாமலை சூசகம்!

    ‘பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும்’ – மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து அண்ணாமலை சூசகம்!

    திமுக அமைச்சர்கள் மக்களை அடிக்க வேண்டுமென சபதம் எடுத்தது போல் தெரிவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    சமீப காலமாகவே திமுக அமைச்சர்கள் சிலரின் செயலும் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் நாசர் நாற்காலி எடுத்துவர தாமதம் ஆனதால் கோபம் கொண்டு தொண்டர் மீது கல் வீசி எறிந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வெளிவந்து ஏற்படுத்திய சர்ச்சைகள் ஓய்வதற்குள்ளாகவே அமைச்சர் கேன்.என்.நேரு ஒரு சம்பவத்தை செய்துள்ளார். 

    விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, தொண்டர்கள் பலரும் அவரை நெருங்க முயல்கையில், அமைச்சர் கே.என்.நேரு அவர்களை அடித்து துரத்துவது போன்று காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. 

    இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, திமுக அமைச்சர்கள் மக்களை அடிக்க வேண்டுமென சபதம் எடுத்தது போல் தெரிவதாக கூறியுள்ளார். 

    “சில நாட்களுக்கு முன் ஒரு அமைச்சர் (நாசர்) கற்களை எறிந்தார். இப்போது மற்றொரு அமைச்சர் (கே.என்.நேரு) மக்களை கடுமையாக நடத்துகிறார். இவை அனைத்தும் தினசரி அடிப்படையில் நடக்கிறது. 

    எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....