சென்னையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்நேரத்தில், அந்த பகுதியில் சென்றுக்கொண்டிருந்த நபர்கள் மீது அந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் அந்த நபர்கள் சிக்கினர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தோர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றுச்சுவரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வங்கியில் பணிபுரியும் இளம்பெண் பிரியா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 2 பெண்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து குறித்து தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா ஷாருக்கானின் பதான்? – வெளிவந்த ரிப்போர்ட்!