திருச்சியில் மனைவி இறந்த சிறிது நேரத்திலேயே கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம், பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேந்தவர் கிருஷ்ணன். இவருக்கு வயது 91. இவரது மனைவி சம்பூரணத்தம்மாள் வயது 86. இந்த தம்பதிக்கு 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.
இந்த தல்லாத வயதில் கணவரான கிருஷ்ணன், மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் இருக்கும் மகன் ஒருவரது வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள இன்னொரு மகன் வீட்டிலும் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 05.30 மணி அளவில் சம்பூரணத்தம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது உடலை மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள வீட்டில் வைப்பதற்காக குடும்பத்தினர் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
அப்போது அவசர ஊர்தியில் ஏற்ற முயன்றுகொண்டிருக்கும் போது, மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த கிருஷ்ணன் காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். இதையடுத்து கணவன்-மனைவியான கிருஷ்ணன், சம்பூரணத்தம்மாள் ஆகிய இருவரின் உடல்களும் அருகருகே அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
மனைவி உயிரிழந்த 1 மணி நேரத்திலேயே கணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்ய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.