நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பிறர் பயன்படுத்த கூடாது என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் அமிதாப் பச்சன். இவர் தனது 80-வது வயதிலும் சினிமா, தொலைகாட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். மேலும் வார இறுதி நாட்களில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.
இதனிடையே, அமிதாப் பச்சன், தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடைவிதிக்க கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன்பு இன்று வந்தது. அப்போது நடிகர் அமிதாப் பச்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சியில் லாட்டரி மோசடி நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர், அமிதாப் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்தி துணி, சுவரொட்டிகள் தயாரிப்பதாகவும், இதனால் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்கள், குரல் ஆகியவற்றை முன் அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமிதாப் பச்சன் பெயர், புகைப்படங்கள், குரல், ஆகியவற்றை முன் அனுமதியின்றி பிறர் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மீண்டும் ரிலீஸாகும் ‘லவ்-டுடே’…கல்லாக்கட்டுமா?