Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்...

    சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்…

    12 மாவட்ட சிறைகளில் ரூ. 2.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2022) தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 2 கோடியே 51 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார்.

    தமிழ்நாட்டில், குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல்துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட, மத்திய சிறைகளில், நீதித்துறை நடுவர் மற்றும் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக்கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.

    அதனைத் தொடர்ந்து, 13 மாவட்ட சிறைகளில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் – பேரூரணி, கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில், விருதுநகர் மாவட்டம் – விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டம் – இராமநாதபுரம், சேலம் மாவட்டம் – ஆத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் – வேடம்பட்டு, தேனி மாவட்டம் – தேனி, திருப்பூர் மாவட்டம் – திருப்பூர், தருமபுரி மாவட்டம் – தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டம் – கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 12 மாவட்டச் சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
    இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் மாவட்டச் சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் விசுவநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களை நல்வழி படுத்தும் அதிகாரத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....