Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் அஜித்குமார் பெயரில் நடந்த பண மோசடி... அதிர்ச்சியான பெண்..

    நடிகர் அஜித்குமார் பெயரில் நடந்த பண மோசடி… அதிர்ச்சியான பெண்..

    நடிகர் அஜித் குமார் பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தென்னிந்திய திரைத்துறையில் முக்கியமான நடிகர், அஜித்குமார். இவருக்கென்று பல்லாயிரத்தில் ரசிகர்கள் உள்ளனர். இவரின் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு எச்.வினோத் இயக்கியுள்ள ‘துணிவு’ என்கிற திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனால், இப்படத்திற்கான புரோமஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

    இந்நிலையில், திருநெல்வேலி பகுதியில் நடிகர் அஜித்குமார் பெயரை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் அஜித் குமார் நற்பணி மன்றத்தின் மூலம் வீடு கட்டித் தருவதாகக் கூறியுள்ளார். இந்த வீடு தொடர்பாக அந்தப் பெண்ணிடம் 1.10 லட்சம் ரூபாய் பெற்று அந்த இளைஞர் மோசடி செய்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, அப்பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தற்போது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் அஜித்குமார் தன் ரசிகர் மன்றங்களை பல வருடங்களுக்கு முன்பே கலைத்தது குறிப்பிடத்தக்கது. 

    எதிராக வந்த முடிவு; என்ன செய்யப் போகிறார் எலான் மஸ்க்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....