Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு திரைப்படத்திலிருந்து வெளிவந்த மூன்றாவது பாடல்...கவருமா அம்மா சென்டிமென்ட்?

    வாரிசு திரைப்படத்திலிருந்து வெளிவந்த மூன்றாவது பாடல்…கவருமா அம்மா சென்டிமென்ட்?

    விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள திரைப்படம்தான், வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கும் இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

    வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், படக்குழு புரோமஷன் திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற 24-ஆம் தேதி சென்னையில் கோலகலமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    வாரிசு படத்தின் பாடல்களை பொறுத்தவரையில், முதற்கட்டமாக விஜய்யின் குரலில் ரஞ்சிதமே பாடல் வெளியாகியது. இப்பாடலில் விஜய்யுடன் இணைந்து மானசி பாட பாடல் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் குரலில் வெளிவந்த ‘தீ தளபதி’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கான சிலம்பரசனின் வீடியோ பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து வெளிவந்த இரு பாடல்களுமே கொண்டாட்ட ரகத்தை சேர்ந்தவையாகவே இருந்தன. 

    இந்நிலையில், மெலோடி பாடல் எதுவும் வாரிசு திரைப்படத்தில் இருக்கிறதா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அதற்கு பதில் தரும் விதமாக வாரிசு திரைப்படத்தில் இருந்து ‘அம்மா எனும் உணர்வை’ மையப்பகுதியாக கொண்டு ஒரு பாடல் வெளியாகியுள்ளது. 

    பாடலாசிரியர் விவேக் வரியில் பாடகி சித்ரா இப்பாடலை பாடியுள்ளார்.  பல திரைப்படங்களுக்குப் பிறகு விஜய்யின் நடிப்பில் அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகிவுள்ளதால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். மேலும், இப்பாடல் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியாகும் மூன்றாவது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் அஜித்குமார் பெயரில் நடந்த பண மோசடி… அதிர்ச்சியான பெண்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....