ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்து மதக் கடவுளான விஷ்ணுவை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் 30 வயதுடைய பூஜா என்ற பெண். இவர் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்தகர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி இந்து மதக் கடவுளான விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டார்.
பூஜா இந்துமத முறைப்படி, திருமணத்திற்கு விநாயகர் பூஜை, அக்கினிப் பூஜை என அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டது. இவ்வளவு செய்தும் மணமகன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. காரணம் பூஜா திருமணம் செய்துகொண்டது தனக்கு பிடித்த கடவுளான விஷ்ணுவை தான். தற்போது இவர் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
ஏன் இவ்வாறு விஷ்ணுவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பூஜாவிடம் கேட்டதற்கு அவர், திருமணத்தில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும், இதற்கு பெற்றோர்கள் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், திருமணத்தால் தேவையற்ற பிரச்சனைகள் வரும் என்றும், ஆனால், விஷ்ணுவை திருமணம் செய்துகொள்வதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
பூஜாவின் இந்தக் திருமணம் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வேடிக்கையாக மாறி இருக்கிறது. மேலும் பலர் இந்நிகழ்விற்கு விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
எதிராக வந்த முடிவு; என்ன செய்யப் போகிறார் எலான் மஸ்க்?