Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் 500 கீழ் குறைந்த தினசரி கொரோனா தொற்று பாதிப்பு...

    இந்தியாவில் 500 கீழ் குறைந்த தினசரி கொரோனா தொற்று பாதிப்பு…

    புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று வெகுவாகவே குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 406 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (நவம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,69,421 ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,402 ஆக உள்ளது.

    இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,586 ஆக உள்ளது.

    தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,32,443
    ஆக அதிகரித்துள்ளது .

    தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 219.86 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகமே எதிர்நோக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து: பூரி கடற்கரையில் 8 அடி உயர மணற் சிற்பம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....