புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று வெகுவாகவே குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 406 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (நவம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,69,421 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,402 ஆக உள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,586 ஆக உள்ளது.
தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,32,443
ஆக அதிகரித்துள்ளது .
தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 219.86 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகமே எதிர்நோக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து: பூரி கடற்கரையில் 8 அடி உயர மணற் சிற்பம்