மனைவியின் சவாலை ஏற்றுக் கொண்ட கணவன், மனைவியை தோள் மீது சுமந்து கொண்டு மலையேறிய காட்சிகள் வலைத்தளங்களை கலக்கி வருகிறது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியபுலங்காவை சேர்ந்த வரதவீர வெங்கட சத்ய நாராயணாவும் அவருடைய மனைவி லாவண்யாவும் திருப்பதிக்கு சென்றனர்.
கணவர் வேகமாக படியேறுவதை பார்த்த லாவண்யா, முடிந்தால் தன்னை தோள் மீது வைத்துக்கொண்டு படியேறுமாறு சவால் விட்டார். அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட கணவர், மனைவியை தோள் மீது சுமந்து கொண்டு படியேறத் தொடங்கினார்.
இதைப்பார்த்த மற்ற பக்தர்கள், இந்த காட்சியை காணொளியாக எடுத்துள்ளனர். சிலர் அவர்களை புகைப்படம் எடுத்தனர். சுமார் 70 படிகளை ஏறிச் சென்றப் பிறகு, கணவரின் தோளில் இருந்து லாவண்யா இறங்கிக் கொண்டார்.
திரைப்படங்களில் வருவது போல், இங்கே நேரில் ஒரு சம்பவம் நடந்திருப்பது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளி தற்போது வலைதளங்களை கலக்கி வருகிறது.
இதையும் படிங்க: காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி; தொல்லை தாங்காமல் இருவருக்கும் ‘டேக்கா’ கொடுத்த கணவர்