Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமருத்துவமனையில் இறந்துபோன மனிதநேயம்; ஏர்கூலர் ஆன் செய்ததற்காக 'செருப்பால் அடித்த பெண்'

    மருத்துவமனையில் இறந்துபோன மனிதநேயம்; ஏர்கூலர் ஆன் செய்ததற்காக ‘செருப்பால் அடித்த பெண்’

    மருத்துவமனையில் ஏர் கூலரில் உறங்கிய நபரை, ஒரு பெண் செருப்பால் அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகிறது.

    சத்தீஸ்கரில் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு அறையில் ஏர் கூலரை ஆன் செய்து உறங்கியுள்ளார். 

    இதையடுத்து, காலை அங்கு வந்த பெண் ஒருவர் ஏர் கூலரை ஆப் செய்தார். இதற்கு அந்த நபர் ஏன் ஆப் செய்தீர்கள் என கேட்பதற்குள்ளாகவே அந்தப் பெண் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருந்த அந்த நபரை, செருப்பால் அடித்ததுடன் காலால் பலமுறை எட்டி எட்டி உதைத்தார். இதனிடையே, அங்கு நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் கீழே அமர்ந்திருந்த அந்த நபரை குச்சியால் குத்துகிறார். 

    இதையறிந்து அங்குவந்த பாதுகாப்பு பணியாளர்கள், அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவரை தாக்கிய அந்த பெண்ணை, அந்த நபர் எதுவும் செய்யவில்லை. பிறகு, அந்த நபர் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

    இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் குவியும் வேலைவாய்ப்பு; மக்களே விண்ணப்பித்துவிட்டீர்களா?

    இதுகுறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், அந்த நபர் ஆதரவற்றவர் என்றும், தூங்குவதற்கு இடம் தேடி மருத்துவமனைக்குள் வந்த அவர் ஏர் கூலர் ஆன் செய்து உறங்கியதாகவும் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற நபர்கள் உள்ளே நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....