Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மூன்றவாது முறையாக ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்..

    மூன்றவாது முறையாக ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்..

    ஆஸ்திரேலியாவில் மூன்றவாது முறையாக காலிஸ்தான் அமைப்பினரால் இந்து கோயில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

    ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகளில் காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த சில வாரமாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில்களை சேதப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 16-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சிவா- விஷ்ணு கோயிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். இதற்கு முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சுவாமி நாரயண் கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடினர். 

    இச்சம்பவம் தொடர்பாக தற்போது விக்டோரியா மாகாண போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 3-ஆவதாக ஒரு இந்து கோயில் நேற்று (ஜனவரி-23) ஆம் தேதி தாக்குதலுக்குள்ளானது. 

    மெல்போர்ன் நகரின் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள இஸ்கான் அமைப்புக்குச் சொந்தமான ஹரே கிருஷ்ணா கோயிலுக்குள் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கிருந்த பொருள்களை சூறையாடினர். கோயில் சுவரில் ‘ஹிந்துஸ்தான் வீழ்க’ என்ற வாசகத்தையும் அவர்கள் எழுதிவிட்டுச் சென்றனர்.

    தற்போது, இச்சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்துள்ளது. காவல்துறையும் புகாரின் பேரில் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நடிகர் விஜய்யின் படத்தில் ஃபஹக் பாசில்? – அவரே சொன்ன பதில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....