Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்யாஷ் நடிச்சாலே இனி அது பான்-இந்தியாதான்! ; கே.ஜி.எஃப் வெற்றியின் எதிரொலி!

    யாஷ் நடிச்சாலே இனி அது பான்-இந்தியாதான்! ; கே.ஜி.எஃப் வெற்றியின் எதிரொலி!

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான ‘கே.ஜி.எஃப் 2′ திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியான இப்படம் அனைத்து மாநில ரசிகர்கள் மனதையும் வென்றது. உலகம் முழுவதும் கேஜிஎப் 2 திரைப்படம் 1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1000 கோடி வசூல் செய்துள்ளது.

    2007ம் ஆண்டு முதல் கன்னட படங்களில் நடித்து வருபவர் நடிகர் யாஷ். 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும்,KGF படத்தின் மூலம் தற்போது இந்திய லெவல் மட்டுமல்லாது வேர்ல்ட் ஃபேமஸ் ஆகியுள்ளார்.

    2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரிலீசான KGF முதல் பாகம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் என்னும் டான் கதாபாத்திரத்தில் மாஸாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த யாஷ், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

    கே.ஜி.எஃப் 2 வெளியாகி வெகு சில நாட்களிலேயே 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கே.ஜி.எஃப் படத்திற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் யாஷ். கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3ம் பாகமும் படக்குழு அறிவித்தனர்.

    கே.ஜி.எஃப் படத்தின் இமாலய வெற்றிக்குப் பின்னர் யாஷ் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் எந்த இயக்குனருடன் அடுத்து கூட்டணி வைக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரம் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேஜிஃஎப் படத்தின் தயாரிப்பாளர் கிரகந்தூர் சமீபத்தில் பேசிய போது, “யாஷ் இனிமேல் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துவிட்டார். அவர் இனி கன்னட நடிகரோ, தென்னிந்திய நடிகரோ இல்லை. எனவே அவரால் இனி சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க முடியாது. பான் இந்தியா படங்களில் மட்டுமே அவர் இனி நடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அவரை அணுக முடியாது என்று தெரிகிறது. இந்நிலையில், யாஷ் அடுத்ததாக’ மஃப்டி’ படத்தின் இயக்குனர் நார்தன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இன்று எப்படி; பயணம் போகலாமா? சந்திராஷ்டமம் யாருக்கு? – இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....