Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகாலையிலேயே சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை; சாலைகளில் தேங்கிய நீரால் மக்கள் அவதி

    அதிகாலையிலேயே சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை; சாலைகளில் தேங்கிய நீரால் மக்கள் அவதி

    சென்னை புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 

    தமிழகத்திலிருந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது.

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    இதன்படி சென்னையில் மாநகர்ப் பகுதிகளான நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. 

    சென்னை புறநகர் பகுதிகளான திருமங்கலம், அம்பத்தூர் பாடி, மண்ணூர்பேட்டை, கொரட்டூர், முகப்பேர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பட்டாபிராம், அயபாக்கம், திருநின்றவூர் ,கிண்டி, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. 

    குறிப்பாக, வண்டலூர் பகுதியில் இரண்டு மணி நேரமாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அலுவலகங்களுக்கு செல்வோரும் வாகன ஓட்டிகளும் சற்று சிரமம் அடைந்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....