குஜராத் ஆமதாபாத்தில் மூன்று மாத குழந்தையை, மூன்றாவது மாடியிலிருந்து துாக்கி வீசி கொலை செய்த தாயை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள அசர்வாவில், மருத்துவமனை ஒன்றில் உடல்நிலை சரியில்லாத மூன்று மாத குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தது. இந்த குழந்தையின் தாய், ஃபர்ஸானாபானு மாலேக். இவருக்கு வயது 23.
தனது குழந்தை காணாமல் போனதாக ஃபர்ஸானாபானு தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து துாக்கி வீசியுள்ளார். இச்சம்பவத்தில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சியில் ஃபர்ஸானாபானு குழந்தையுடன், மாடிக்கு செல்கிறார். திரும்ப வரும்போது குழந்தை இல்லாமல் வருகிறார். இதைக்கொண்டு காவல்துறை விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில், ஃபர்ஸானாபானு குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், ‘குழந்தை பிறந்தது முதல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அது படும் வேதனையை பொறுக்க முடியாமல் இந்த துயரமான முடிவை எடுத்ததாகவும்’ கூறியுள்ளார். குழந்தையின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டுள்ள நிலையில், தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
‘கலையில் ஜாதி, மதம் கிடையாது’ – கேரள முதல்வர் பேச்சு..