Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதகவல் அறியும் உரிமை சட்டம்; கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 பேர்

    தகவல் அறியும் உரிமை சட்டம்; கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 பேர்

    குஜராத் மாநிலத்தில் இனி தன் வாழ்நாளில் 9 பேர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த இயலாது என அம்மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    அரசு துறைகளில், தாங்கள் பெற விரும்பும் தகவல்களை குடிமக்கள் அறிவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் வழிவகைச் செய்கிறது.

    இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை துன்புறுத்தியதாக குஜராத் மாநிலத்தில் 9 நபர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை, குஜராத் மாநில தகவல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    இதனால், இனி அந்த 9 நபர்களுக்கும் தங்கள் வாழ்நாள் முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எந்த தகவலையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    கருப்பு பட்டியலில், சேர்க்கப்பட்டுள்ள அந்த 9 நபர்களுடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக ஹிதேஷ் படேல் என்பவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    இந்த 9 நபர்களில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 150 விண்ணப்பங்களை அளித்திருந்தார் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளது.

    சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமைச்சருக்கு ஓராண்டு சிறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....