மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக கர்நாடக அரசு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்துகொள்ள தமிழ் திரையுலகில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அழைப்பு விடுப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் ,பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி அதிகாலை உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
46 வயதிலேயே இவ்வுலகை விட்டு மறைந்த புனித் கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் இளைய மகனாக 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிரேமதா கனிகே படத்தில் தோன்றி..2002-ல் கதாநாயகனாக உருவெடுத்து கன்னட திரையுலகில் மட்டுமல்லாது ,கன்னட மக்களிடத்திலும் மாபெரும் சக்தியாக , அனைவரும் கொண்டாடும் நல்ல மனிதராகவும் ,கோடை வள்ளலாகவும் கொண்டாடப்பட்டவர் .
தனது சிறப்பான பணிகளால் பல இதயங்களை வென்று ,ஒரு வலிமைவாய்ந்த நடிகராக கன்னட திரையுலகில் வளம் வந்த புனித் ராஜ்குமார் மறைந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.அவரின் இந்த முதலாம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கர்நாடக அரசு ,அம்மாநிலத்தின் உயரிய விருதான ‘கர்நாடகா ரத்னா’ விருதை நவம்பர் 1- ஆம் தேதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
கர்நாடக சட்டசபையான விதான சவுதாவில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது .அப்படிப்பட்ட இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ் திரையுலகில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு திரையுலகில் இருந்து ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு கர்நாடக அரசு சார்பில் அழைப்பு விடுத்து ,அதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் .
அரசு சார்பில் கொடுக்கப்படும் இந்த விருது புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவுக்குப் பிறகு வழங்கப்படும் முதல் விருதாகும். இதற்கு முன்பாக இந்த விருது புனித்ராஜ்குமார் அவர்களின் தந்தையும்,கன்னட சூப்பர் ஸ்டாருமான ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.கன்னடத் திரையுலகில் சிறந்த சேவைக்காக ‘கர்நாடகா ரத்னா’ விருது பெற்ற தந்தை – மகன் இவர்கள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் விஜய் செய்த செயல்…உணர்ச்சிவசத்தில் ரசிகர்!