Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'குரங்குகள்' என்பது அநாகரீக பேச்சு: கொந்தளிப்பில் பத்திரிக்கையாளர்கள்.. மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை?

    ‘குரங்குகள்’ என்பது அநாகரீக பேச்சு: கொந்தளிப்பில் பத்திரிக்கையாளர்கள்.. மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை?

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை பார்த்து , எல்லாரும் மரத்து மேல குரங்கு தவுகிற மாதிரி எல்லாரும் சுற்றி சுற்றி வரீங்க என அவமரியாதையாக சாடியதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    கடலூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்டபோது, அண்ணாமலை அவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது.. நான் சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டு போனேன். மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவன் சொல்றதுக்கு எல்லாம் பதில் கேப்ப அதுக்கெல்லாம் பதில் சொல்லணுமா.. நவுருங்க” என்று கடுமையாகப் பேசிவிட்டு புறப்பட்டார்.

    சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீபாவளி மதுவிற்பனை எண்ணிக்கை குறித்து பேசி விட்டு, இது தொடர்பாக என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள்; பத்திரிகையாளர்களை மிரட்டாதீர்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுரை கூறியிருந்தார்.

    ஆனால், இரண்டு நாட்களுக்குள் நேற்று (27-10-2022) வியாழக்கிழமை கடலூரில் செய்தியாளர்கள் கேள்விகேட்க முயன்றபோது ஆத்திரமடைந்து மரத்து மேல குரங்கு போல தாவித்தாவி சுற்றி சுற்றி வருகிறீர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார்.

    அமைச்சர் செந்திபாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு நாய், பேய் சாராயவியாபாரிக்கு எல்லாம் பதில் கூறமுடியாது எனவும் ஆவேசப்பட்டிருக்கிறார். அவரது அரசியல் எதிர்வினைகள் குறித்து நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. ஆனால் அண்ணாமலை செய்தியாளர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி குரங்குகள் என்று தரக்குறைவான விமர்சனம் செய்திருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

    உண்மையான பத்திரிகையாளர்கள் அறிவாலயத்திற்கும் அடிமைகளும் இல்லை அவர்கள் கமலாலயக் கூலிகளும் இல்லை. கட்சி, ஆட்சி என பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்தி இழிவுப்படுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் அவமதிக்கப்படும் மிரட்டப்படும் போக்கு அதிகரித்து வருவது வேதனைக்கும் கண்டனங்களுக்கும் உரியது. பொது வெளியில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டியதை மீண்டும் வலியிறுத்துவதோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். அதுவே ஆரோக்கிய அரசியலாக அமையும் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதற்காக காங்கிரஸ் சட்டமன்றத் கட்சித் தலைவர் செல்லவப்பெருந்தகை, திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அமைச்சர்,செந்தில் பாலாஜி, திமுக எம்.பி செந்திகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....