ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அரசு பேருந்து டயர் வெடித்து, எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து வாலாஜாபேட்டை வழியாக திருத்தணி வரை செல்லும் அரசு பேருந்து, கீழ் புதுப்பேட்டை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்ப்பாராத விதமாக பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.
இதன் காரணமாக நிலைகுலைந்த பேருந்து வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட நபர்களுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அவர்கள் வாலாஜாபேட்டை காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனர்.
இதன் அடிப்படையில் விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து சாலை போக்குவரத்து விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவங்கள்; நிறைமாத கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் பலி