Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரேமம் திரைப்பட இயக்குநரின் அடுத்தப் படைப்பு; வெளிவந்த தணிக்கை சான்றிதழ்..

    பிரேமம் திரைப்பட இயக்குநரின் அடுத்தப் படைப்பு; வெளிவந்த தணிக்கை சான்றிதழ்..

    பிரேமம் திரைப்பட இயக்குநரின் அடுத்தப் படைப்பான கோல்டு திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. 

    நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம், பிரேமம். மூன்று பருவங்களில் நிகழும் காதல் கதையை மிகவும் அழகாக பிரேமம் திரைப்படம் காட்சிப்படுத்தியது. மலையாளத்தில் வெளிவந்திருந்தாலும், இந்திய அளவில் பிரேமம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பிரேமம் ஓடியது. 

    மாபெரும் வெற்றிப் பெற்ற பிரேமம் திரைப்படத்தை, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். பிரேமம் திரைப்படத்திற்கு முன்பாக, இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    இப்படியாக நேரம், பிரேமம் என இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு ‘கோல்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்டு’, பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

    இதன் பின்னர், சமீபத்தில் ‘கோல்டு’ திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளத்தில் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் திரைப்படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், கோல்டு திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளிவந்துள்ளது. அதன்படி, கோல்டு திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும், இத்திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ரஷ்யாவில் வெளியாகப் போகும் புஷ்பா…கொடி பறக்குமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....