நாகை அருகே திருடிய வீட்டிலேயே திருட்டு கும்பல் பார்ட்டி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கும் வீட்டில் தடையங்களை விட்டுச் செல்லாமல் இருக்க முயல்வர். மேலும் கொள்ளையடித்த உடனே அங்கிருந்து செல்ல நினைப்பர். ஆனால், ஒரு கொள்ளைக் கும்பல் மிகவும் வித்தியாசமான முறையில் திருடிய இடத்திலேயே பார்ட்டி செய்து சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே இருக்கும் ஆய்மழை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 10 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் கோயில் திருவிழாவுக்கு சென்றார்.
இந்நிலையில், இதனை அறிந்த கொள்ளையர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். மேலும் அங்கிருந்த 4 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர தோடு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையடித்தது மட்டும் இல்லாமல் கொள்ளையடித்த வீட்டிலேயே ஆற அமர மதுவும் அருந்தியுள்ளனர். மேலும் அந்த வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைடிஷ் ஆக தொட்டுக் கொண்டதும் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளைக் கும்பலை தேடி வருகின்றனர்.
உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதுதானா? – இன்றைய ஸ்பெஷல்!