சென்னை தாம்பரம் பகுதியில் இன்று காலை 9.15 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது தாம்பரம். இப்பகுதியில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படும், குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் கூட்ட நெரிசல் இருக்கும் இடமாக தாம்பரம் உள்ளது.
ரயில்நிலையம் அமையப்பெற்றதாலும், புறநகர் பேருந்துகள், மாநகராட்சி பேருந்துகள், தனியார் உள்ளூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் போன்றவைகள் தாம்பரத்தில் எளிதில் கிடைப்பதாலும் தாம்பரத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தும் சென்றுக்கொண்டும் இருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 9.15 மணியளவில் தாம்பரத்தில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். அரசு மாநாகராட்சி பேருந்தின் மீது மோதியதாக சிலரும், பேருந்து உயிரிழந்த நபர் மீது ஏறியதாகவும் கூறப்படுகிறது. விபத்து நடந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அந்நபரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனை மையத்திற்கு கொண்டு சென்றனர்.
எப்படி இந்த விபத்து நடந்தது என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருவதாகவும், இறந்தவர் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.