Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

    சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

    சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல வருகிற 7 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. பிரதி தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும்.

    பூஜைக்கு இரண்டு நாள்கள் முதல் நான்கு நாட்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக,  பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து மலையேறி சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்வர்.

    அந்தவகையில், மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வர உள்ள நிலையில், வருகிற 7 ஆம் தேதி வரை சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

    இசைவெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த விதம்… கருத்து தெரிவித்த இசையமைப்பாளர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....