இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடும் முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி 2023-ஆம் ஆண்டின் முதல் தொடராக இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்காக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், இன்று முதலாவது இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணியளவில் தொடங்கவுள்ளது.
மேலும், ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருபது ஓவர் அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஜவேந்திர சஹல், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.
இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இசைவெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த விதம்… கருத்து தெரிவித்த இசையமைப்பாளர்..