Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்று இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் போட்டி; கோலிக்கு ஓய்வு..கேப்டனாக ஹர்திக்..

    இன்று இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் போட்டி; கோலிக்கு ஓய்வு..கேப்டனாக ஹர்திக்..

    இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடும் முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 

    இந்திய கிரிக்கெட் அணி  2023-ஆம் ஆண்டின் முதல் தொடராக இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்காக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளன. 

    இந்நிலையில், இன்று முதலாவது இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணியளவில் தொடங்கவுள்ளது. 

    மேலும், ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இருபது ஓவர் அணி:

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஜவேந்திர சஹல், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.

    இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இசைவெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த விதம்… கருத்து தெரிவித்த இசையமைப்பாளர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....