ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் பேருந்துகளின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
குன்றத்தூரில் இருந்து இன்று காலை TN01N5450 என்ற அரசு பேருந்து ஆலந்தூர் நோக்கி கிளம்பிச் சென்றது. மேலும், இந்த பேருந்தில் அரசு பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
இந்த பேருந்து ராமாபுரம் அருகில் சென்றுக் கொண்டிருக்கும் போது, மெட்ரோ மேம்பால பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த பில்லர் அங்கு வந்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீதும், அதனருகில் வந்துக்கொண்டிருந்த லாரியின் மீதும் விழுந்தது. இதனால் பேருந்து முற்றிலும் நாசமாகியது. மேலும், லாரியும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.