சர்வதேச கால்பந்து உலகக் கோப்பையில் நாளை மற்றும் நாளை மறுநாள் காலிறுதிச் சுற்றுகள் நடைபெறவுள்ளன.
கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்தும், தற்போது காலிறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.
இந்த காலிறுதிச் சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி, பிரேசில், குரோசியா, அர்ஜென்டீனா, நெதர்லாந்து, போர்ச்சுகல், மொராக்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.
மேலும், இந்த காலிறுதிச் சுற்றுகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. டிசம்பர் 9-ஆம் தேதியாகிய நாளை இரு ஆட்டங்களும், நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 10-ஆம் தேதி இரு ஆட்டங்களும் நடைபெற உள்ளன.
இதைத்தொடர்ந்து, டிசம்பர் 13, 14 தேதிகளில் அரையிறுதிச் சுற்றும் டிசம்பர் 18 அன்று இறுதிச் சுற்றும் நடைபெறவுள்ளன. இதனிடையே, டிசம்பர் 17 அன்று 3-வது இடத்துக்கான ஆட்டம் நடைபெறுகிறது.
டிசம்பர் 9
பிரேசில் – குரோசியா (இரவு 8.30 மணி)
அர்ஜென்டீனா – நெதர்லாந்து (நள்ளிரவு 12.30 மணி)
டிசம்பர் 10
போர்ச்சுகல் – மொராக்கோ (இரவு 8.30 மணி)
பிரான்ஸ் – இங்கிலாந்து (நள்ளிரவு 12.30 மணி)
தொடரை இழந்த இந்திய அணி; காயத்தை பொருட்படுத்தா ரோஹித் சர்மா..