கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லநொய்கி என்ற நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றது. அப்போது லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் மிக வேகமாக வந்த சரக்கு ரயில் மீது மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது.
இரண்டு ரயில்களும் மோதிய இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் சில பேட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 85 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விரைந்து சென்ற மீட்டுப்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
BREAKING: Passenger train collides with cargo train in northern Greece.
@Patriots_General pic.twitter.com/kCfliNAWYv
— Willem (@NerumWim) March 1, 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி; தடுமாறும் இந்திய அணி