Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

    தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  விண்ணப்பித்துள்ளனர். அதில், சுமார் 2.94 லட்சம் பேர் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 

    இந்நிலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் சேர்க்கை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த புதன்கிழமை (ஜூலை 27) முடிவடைந்தது. 

    இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

    சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 130 இணைப்புக் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட பிரிவுகளில் சேர்வதற்கும் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மாணவர்களிடையே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான ஆர்வத்தை அதிகரிக்க சென்னை பல்கலைக்கழகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே இறுதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....