Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்விமான பயணக்கட்டணம்; எங்கள் கைகளில் எதுவுமில்லை- இணை அமைச்சர்

    விமான பயணக்கட்டணம்; எங்கள் கைகளில் எதுவுமில்லை- இணை அமைச்சர்

    விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவுமில்லை என உள்நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

    நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விமானக் கட்டணங்கள் குறித்த கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். 

    அவர் எழுப்பிய கேள்வியாவது: 

    கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விமானக் கட்டணங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓராண்டில் பிரபலமான தடங்களில் 50 சதவீதம் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இதை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? கட்டணங்களை கட்டுப்படுத்த அரசிடம் ஏதாவது அதிகாரம் தக்க வைக்கப்பட்டுள்ளதா?

    அரசின் கைகளில் இருந்த ஒரே விமான நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதால் அரசிடம் இருந்த விலைக் கடிவாளம் கை நழுவிப் போய் விட்டதா? மலிவு விமானப் பயணத்தை உறுதி செய்ய அரசின் தலையீடுகள் என்ன? 

    இவ்வாறு, சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சரும், ஓய்வுபெற்ற விமானப்படை தளபதியுமான வி.கே.சிங் இதற்கு பதில் அளித்துள்ளார்.

    அவர், அளித்துள்ள பதிலாவது :

    விமானக் கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதும் இல்லை. கட்டுப்படுத்துவதும் இல்லை.  1937 விமானங்கள் சட்டம் பிரிவு 135 உட்பிரிவு 1 இன் படி ஒவ்வொரு விமான நிறுவனமும் செலவினம், சேவையின் தன்மை, நியாயமான லாபம், நடப்பில் உள்ள கட்டண அமைப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். 

    ஆகவே, நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கிற சுதந்திரம் விமான நிறுவனங்களுக்கு பிரிவு 135 உட்பிரிவு 1 படி உண்டு. இருப்பினும், அசாதாரண கொரோனா சூழலைக் கணக்கில் கொண்டு சட்டப் பிரிவு 8 பி பயன்படுத்தி அரசாணை எண் 02.20/ 21.05.2020 மூலம் உச்ச பட்ச, கீழ் வரம்பு கட்டணங்கள் தற்காலிகமாக வரைமுறை செய்யப்பட்டது. 

    இந்த விலை கட்டண அமைப்பு காலத்திற்கேற்ப, விமான எரிபொருள் விலை உயர்வுகளையும் கணக்கில் கொண்டு, மாற்றங்களுக்கு ஆளாகியது. 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விலை உச்சவரம்பை இப்போதும் நிர்ணயித்து, பயணிகளின் நலனைப் பாதுகாக்கிறோம். ஏர் இந்தியா ஜனவரி 2022-இல் தான் விற்கப்பட்டது. ஆனால், விலை உச்சவரம்பு மே 2020-இல் இருந்து அமலில் உள்ளது.

    மேலும், 2016-இல் இருந்து உடான் (UDAN) திட்டம் மூலம் அதிக போக்குவரத்து இல்லாத, பிராந்திய விமான தளங்களின் இணைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.

    இவ்வாறு, அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இந்தப் பதில் குறித்து, “அரசுக்கு கடிவாளம் கைகளில் இல்லை என்பதே இந்த பதிலின் சாரம். மலிவு விலை விமானப் பயணங்கள் பொருளாதார சீர் திருத்தங்களின் வெற்றி என்று தம்பட்டம் அடித்த அரசாங்கம், இரண்டு மாதங்களில் 20 சதவீதம் உயர்வு, ஓராண்டில் 50 சதவீதம் உயர்வு ஏன்? என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை” என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

    சுவிஸ் வங்கியில் பண முதலீடு பற்றி தகவல் இல்லை – மத்திய நிதி அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....