Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசரியாக வேலை செய்யாததால் கூலி தொழிலாளி அடித்துக்கொலை - முதலாளி கைது!

    சரியாக வேலை செய்யாததால் கூலி தொழிலாளி அடித்துக்கொலை – முதலாளி கைது!

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் தோட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள விடுதலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது ஐம்பது. கூலி தொழிலாளி. இவர் பெரிய குருக்கை கிராமத்தில் உள்ள தனியார் பண்ணை தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக முருகேசனின் மனைவி சகுந்தலா அவருக்கு போன் செய்தபோது, அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அவரை காணவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி தோட்ட உரிமையாளரான ராஜாபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் முருகேசனை அவரது வீட்டிற்குள் வந்து விட்டுள்ளனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் முருகேசனின் உயிர் பிரிந்தது.

    இதனால் அதிர்ச்சிக்குள்ளான முருகேசனின் மனைவி சகுந்தலா, இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காவல்துறையினரின் விசாரணை திருப்திகரமாக இல்லாத காரணத்தினால் திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. முருகேசனின் மனைவி சகுந்தலா தொடர்ந்து தனது உறவினர்களுடன் விடாமுயற்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இதில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தோட்டத்தின் உரிமையாளர் செந்தில் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, கல்லக்குடி போலீசார், தோட்ட உரிமையாளர் செந்தில்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், முருகேசன் தான் சொன்ன வேலையை சரியாக செய்யாததால் அவரை கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி காயப்படுத்தியதை செந்தில் ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து, முருகேசனை வேலைக்கு சேர்த்து விட்ட தனபால் என்பவருடன் அவரது வீட்டில் சென்று போட்டுவிட்டு வந்ததாக கூறினார். இதனை அடுத்து, போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பண்ணையில் வேலை பார்த்து வந்த தொழிலாளியை கண்மூடித்தனமாக தாக்கி உயிர் இழக்க செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கியூட்டி.. ஸ்வீட்டி.. செல்லம் – முயல் வளர்ப்பு ஒரு பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....