Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்நெருக்கடியில் எலான் மஸ்க்! ட்விட்டரை வாங்க நாளை ஒருநாள் தான் காலக்கெடு... பின்னணி என்ன ?

    நெருக்கடியில் எலான் மஸ்க்! ட்விட்டரை வாங்க நாளை ஒருநாள் தான் காலக்கெடு… பின்னணி என்ன ?

    எலான் மஸ்க் நாளை ட்விட்டரை கையகப்படுத்துவார் என்று தகவல் வெளிவந்துள்ளது. 

    டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மே மாதம் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ..3.30 லட்சம் கோடி) வாங்குவதற்காக ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

    அதன்பின்னர், போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் (Spam) குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அதுவரையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதன் பின்பு, ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்து எந்த விவரங்களையும் தராததால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார். 

    இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் புதிய போக்குவரத்து விதிமுறை அமலுக்கு வந்தது

    இதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், ஒப்பந்தத்தின்படி அவர் நிறுவனத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ட்விட்டரின் வாரியத் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்தார். இதன்பின்னர், நாளை அதாவது வெள்ளிக்கிழமை 5 மணிக்குள் ட்விட்டரை கையகப்படுத்த வேண்டுமென டெலாவர் நீதிமன்றம் அறிவித்தது. 

    எலான் மஸ்க் விரைவில் ட்விட்டரை வாங்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது இதுகுறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, நாளை எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குகிறார். 

    மேலும், மார்கன் ஸ்டான்லி வங்கி, பாங்க் ஆஃப் அமெரிக்கா, சிலிக்கான வேலி, சவுதி இளவரசர் போன்றோர் எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை வாங்க கடனுதவி அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....