Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர்.. நூதன ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர்

    லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர்.. நூதன ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர்

    மாமல்லபுரத்தில் மின்சார அலுவலக ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்டதால் பாமகவினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். 

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, மின்தடையால் பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தங்கள் பகுதியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை வைத்தனர். அப்படி மாற்றம் செய்வதற்கு அங்கு உள்ள அதிகாரிகள் ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 

    லஞ்சம் கேட்ட மின்சார வாரிய அதிகாரியை கண்டித்து மாமல்லபுரம் நகர பா.ம.க.வினர் நேற்று செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாமக செயலாளர் ஏழுமலை தலைமையில் நூதன போராட்டம் நடத்தினர். 

    பாமக மாமல்லபுரம் நகர செயலாளர் ரா.ராஜசேகர், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பி.வி.கே.வாசு, பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், திருப்போரூர் ஒன்றிய வட்ட செயலாளர் பூ.தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பாமகவினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    pamaga

    ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பூ, பழத்துடன் சில்லரை காசுகளாக ரூ.14 ஆயிரத்தை கையில் ஏந்திகொண்டு, மேளதாளத்துடன் மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பிறகு, மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    தொடர்ந்து பாமகவினர் கூட்டமாக சில்லரை காசுடன் மின்வாரிய அலுவலகம் உள்ளே சென்றனர். அங்கு அதிகாரிகள் யாரும் அலுவலக அறையில் இல்லாத காரணத்தால் மின்வாரிய பணியாளர் ஒருவரின் மேசையில் பாக்கு, பூ, பழம், லஞ்ச பணம் ரூ.14 ஆயிரம் சில்லரை காசுகள் கொண்ட தட்டை வைத்தனர். 

    இது போன்று லஞ்சம் கேட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் பாமகவின் நிர்வாகிகள் தயாளன், அரசியல் ஆறுமுகம், ராமச்சந்திரன், எம்.ஆர்.சீனிவாசன், த.சந்துரு, எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: என் கனவுகளில் மண்ண தூக்கி போட்டுடாங்க ! ஜாமீனுக்கு பின் டிடிஎப் வாசன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....