உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது.
தமிழரின் பண்பாடு பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு! தமிழக அரசு விளக்கம்
நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
உத்தர்காசியில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 24 கிலோமீட்டர் தொலைவிலும் பூமிக்கடியில் 5 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நவம்பர் மாதம் உத்தராகண்ட்டில் உள்ள டெஹ்ரி என்கிற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.