புரோ கபடி போட்டியின் இறுதி போட்டியில் ஜெய்பூர் அணி 33-29 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
12 அணிகள் பங்கேற்ற இந்த புரோ கபடி போட்டியானது, புனே, ஐதரபாத், பெங்களூரு போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. லீக், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து, கடந்த 17-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், புனேரி பல்தான் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் களம் கண்டன. இதில் ஜெய்பூர் பிங் பாந்தர்ஸ் சிறப்பாக விளையாடியது. இந்த அணி சார்பில், அர்ஜூன் தேஷ்வால் 6 ரெய்டு புள்ளிகளையும், சுனில் குமார் 5 டெக்கல் புள்ளிகளையும் பெற்றனர்.
அதேசமயம், புனேரி பல்தான் அணி சார்பில் ஆதித்யா ஷிண்டே 5 ரெய்டு புள்ளிகளையும் அபினேஷ் நடராஜன் 4 டெக்கல் புள்ளிகளையும் பெற்றனர். இரு அணிகளும் தீவிர போட்டியிட்டாலும், இறுதியில் ஜெய்பூர் அணி 33-29 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசனுக்கான வெற்றிப்பட்டத்தை தட்டிச்சென்றது.
உலகக் கோப்பை கால்பந்து; விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா