Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுரோ கபடி லீக்; புனேரி பல்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய ஜெய்பூர்

    புரோ கபடி லீக்; புனேரி பல்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய ஜெய்பூர்

    புரோ கபடி போட்டியின் இறுதி போட்டியில் ஜெய்பூர் அணி 33-29 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

    12 அணிகள் பங்கேற்ற இந்த புரோ கபடி போட்டியானது, புனே, ஐதரபாத், பெங்களூரு போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. லீக், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து, கடந்த 17-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. 

    இப்போட்டியில், புனேரி பல்தான் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் களம் கண்டன. இதில் ஜெய்பூர் பிங் பாந்தர்ஸ் சிறப்பாக விளையாடியது. இந்த அணி சார்பில், அர்ஜூன் தேஷ்வால் 6 ரெய்டு புள்ளிகளையும், சுனில் குமார் 5 டெக்கல் புள்ளிகளையும் பெற்றனர். 

    அதேசமயம், புனேரி பல்தான் அணி சார்பில் ஆதித்யா ஷிண்டே 5 ரெய்டு புள்ளிகளையும் அபினேஷ் நடராஜன் 4 டெக்கல் புள்ளிகளையும் பெற்றனர். இரு அணிகளும் தீவிர போட்டியிட்டாலும், இறுதியில் ஜெய்பூர் அணி 33-29 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசனுக்கான வெற்றிப்பட்டத்தை தட்டிச்சென்றது. 

    உலகக் கோப்பை கால்பந்து; விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....