அருணாச்சல பிரதேசத்தின் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங்கில் மாவட்டத்தில் இன்று காலை 10.31 மணியளவில் நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு! அதிர்ச்சியில் பதறிப்போன பொதுமக்கள்
அருணாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை என மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
முன்னதாக, நேபாள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை..! வானிலை ஆய்வு மையம்