இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேற்கு பப்புவா பகுதியில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது . அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதில் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். எனினும், நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை .
இந்த நிலநடுக்கமானது, அபேபுரா நகரத்திலிருந்து 272 கி.மீ. தொலைவில் கடலுக்கு 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.