சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், மத்திய – சட்டத்துறை அமைச்சகத்தால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றுக் கொண்டார். இவரின் பதவிக்காலமும் வருகின்ற செப்டம்பர் 21-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி எம்.துரைசாமி இளநிலை வணிகவியல் படிப்பை முடித்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். 1987-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.
இவர் 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை மத்திய அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட எம்.துரைசாமி, 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்பு – சக நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் வாழ்த்து