Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மீண்டும் அமெரிக்க தேர்தல் களத்தில் குதிக்க போகும் டொனால்ட் ட்ரம்ப்! வெளியான அறிவிப்பு

    மீண்டும் அமெரிக்க தேர்தல் களத்தில் குதிக்க போகும் டொனால்ட் ட்ரம்ப்! வெளியான அறிவிப்பு

    அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

    அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாரபூர்வமாக டொனால்ட் டிரம்ப் அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

    நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டொனால்ட் டிரம்ப் பேசியபோது, அமெரிக்காவை சிறந்த மற்றும் புகழ்பெற்ற நாடாக மாற்றுவதற்கு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். மேலும் அதற்கான ஆவணங்களை அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். 

    முன்னாள் அதிபராக இருந்த டிரம்ப் கடந்த அமெரிக்க தேர்தலில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். 

    அதே சமயம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அமெரிக்க செனட் சபை தேர்தல் முடிவுகள் ஆளும் ஜனநாயக கட்சிக்கு சாதகமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்கஉணவகமாக மாறவுள்ள பிஸ்தா ஹவுஸ் விமானம் மேம்பாலத்தின் கீழ் சிக்கியது; மீட்பு பணி தீவிரம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....