Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஏடிஎம் மையத்தில் தொங்கிய தலை.. கவ்வியபடி ரோட்டில் திரிந்த நாய்.. குலை நடுங்க வைத்த சம்பவம்

    ஏடிஎம் மையத்தில் தொங்கிய தலை.. கவ்வியபடி ரோட்டில் திரிந்த நாய்.. குலை நடுங்க வைத்த சம்பவம்

    அமெரிக்காவில் இரவு நேரத்தில் ஒரு நாய் மனிதனின் தலையை கவ்வியபடி சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    அமெரிக்காவில் மெக்ஸிகோவில் இரவு நேரம் சாலை ஓரத்தில் நாய் ஒன்று வேகமாக ஓடியுள்ளது. அந்த நாய் தனது வாயில் எதையோ கவ்வியபடி சென்றதை மக்கள் பார்த்தனர். பிறகு, அதை சரியாக உற்று நோக்கிய சிலர், அது மனிதனின் தலை என்று தெரிந்ததும், அங்கு இருந்து அலறி அடித்து ஓடியுள்ளனர். 

    இருப்பினும் அந்த நாய், அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரிந்துள்ளது. நாய் கவ்வியிருந்த அந்த மனிதனின் தலை யார் என்பது தெரியவில்லை. 

    இந்தச் சம்பவம் குறிப்பாக மெக்ஸிகோவின் வடக்கே உள்ள ஜாகேட்டிகேஸ் என்ற மாகாணத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் மான்டே எஸ்க்கோபெடோ என்று நகரத்தில் இருந்த ஏடிஎம் பகுதியில் அந்த மனித தலை இருந்ததாக சொல்லப்படுகிறது. 

    இதற்கு அடுத்த அதிர்ச்சியாக, ‘அடுத்தது உன்னுடைய தலைதான்’ என்ற வாசகம் ஒரு பலகையில் எழுதி தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இதன்காரணமாக, அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஊழியரிடம் நலம் விசாரித்த அஜித்… “நீங்க நல்லா இருக்கணும்” என ஆசி வழங்கிய பாட்டி – வைரல் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....