அமெரிக்காவில் இரவு நேரத்தில் ஒரு நாய் மனிதனின் தலையை கவ்வியபடி சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மெக்ஸிகோவில் இரவு நேரம் சாலை ஓரத்தில் நாய் ஒன்று வேகமாக ஓடியுள்ளது. அந்த நாய் தனது வாயில் எதையோ கவ்வியபடி சென்றதை மக்கள் பார்த்தனர். பிறகு, அதை சரியாக உற்று நோக்கிய சிலர், அது மனிதனின் தலை என்று தெரிந்ததும், அங்கு இருந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.
இருப்பினும் அந்த நாய், அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரிந்துள்ளது. நாய் கவ்வியிருந்த அந்த மனிதனின் தலை யார் என்பது தெரியவில்லை.
இந்தச் சம்பவம் குறிப்பாக மெக்ஸிகோவின் வடக்கே உள்ள ஜாகேட்டிகேஸ் என்ற மாகாணத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் மான்டே எஸ்க்கோபெடோ என்று நகரத்தில் இருந்த ஏடிஎம் பகுதியில் அந்த மனித தலை இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு அடுத்த அதிர்ச்சியாக, ‘அடுத்தது உன்னுடைய தலைதான்’ என்ற வாசகம் ஒரு பலகையில் எழுதி தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்காரணமாக, அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித தலையை தூக்கி செல்லும் நாய்.
Dog carrying human head in #Mexico pic.twitter.com/UfqVXedGmp
— கரசேவகன் (@Nationfirst_Bjp) November 2, 2022
இதையும் படிங்க: ஊழியரிடம் நலம் விசாரித்த அஜித்… “நீங்க நல்லா இருக்கணும்” என ஆசி வழங்கிய பாட்டி – வைரல் வீடியோ