Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இங்கிலாந்து இளவரசி டயனா பயன்படுத்திய காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    இங்கிலாந்து இளவரசி டயனா பயன்படுத்திய காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    உலக புகழ்ப்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயனாவின் கார் ரூபாய் 6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. 

    உலக புகழ்ப்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயனா கடந்த  1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது 25-வது நினைவு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. 

    இந்நிலையில், இளவரசி டயானா 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திய போர்ட் எஸ்கார்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் (ஆகஸ்ட் 28) முன்தினம் ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஏலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் கலந்து கொண்டனர். 

    ஒரு லட்சம் பவுண்டில் அதவாது, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 93 லட்சத்தில் ஏலம் ஆரம்பிக்கப்பட்டது. கடும் போட்டிக்கு நடுவே 6 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டில் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 கோடியே 10 லட்சம்)  நிறைவடைந்தது. 

    இளவரசி டயனா பயன்படுத்திய காரை இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஏலத்தில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....