சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.
137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சற்று குறைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும். இல்லையெனில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
இது தொடர்பாக தூத்துக்குடிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது அவர்கள் குறைப்பது நாங்களா? என்று அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கொரோனா பரவல் தொடர்பான கேள்விக்கு அவர், இந்தியாவில் தெலுங்கானாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது. இப்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக இல்லை. பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை புதியவகை தொற்று பரவவே இல்லை மேலும் தொற்று தமிழகத்தில் ஐம்பதுக்கு கீழ் தான் உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனாவிற்கு உயாிழப்பு எதுவுமில்லை சுகாதாரத் துறையில் 4ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த வாரம் எப்படியிருக்க போகுது மக்களே…. மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள் இதோ!